Thursday, December 4, 2008

பிஞ்சுமனசு: பாடல்கள்: புஷ்கின் ராஜ்குமார்


இளங்கோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.இளங்கோவன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு பிஞ்சுமனசு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி டி.ஜெய்ராம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆர்த்தி, கணேஷ், பல்லவி, புவனா, மாஸ்டர் தருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஜெயச்சந்திரன், இசை இந்தியன், பாடல்கள் ஜெயராம், ஸ்ரீனிவாசன், புஷ்கின் ராஜ்குமார், இளங்கோவன், படத்தொகுப்பு முகம்மது இப்றாகிம், நடனம் கென்னடி, கலை வி.சீனிவாசன், தயாரிப்பு மேற்பார்வை குமார்.

சரவணன் தர்ஷா தம்பதிக்கு திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. அதனால் அக்குழந்தை மீது உயிரையே வைத்து வளர்க்கின்றனர். தீடீரென ஒரு நாள் அவர்களின் குழந்தை காணாமல் போய்விடுகிறது.குழந்தையைக் காணாமல் துடித்துப் போகும் அத்தம்பதி, தங்களின் குழந்தையைத் தேடிக்கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியும், அவர்களின் உணர்ச்சிகரமான கணங்களும்தான் பிஞ்சுமனசு படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27ம் தேதி தொடங்கி சென்னை , காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற ஊர்களில் நடைபெறுகிறது.தயாரிப்பு எம்.இளங்கோவன்.

No comments: